வல்வெட்டிதுறை குமார் ஆனந்தன் நீச்சல் தடாக நிர்மாணத்துக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்றையதினம் நடைபெற்றது.பிரதம விருந்தினராக நிதி மற்றும் ஊடக அமைச்சர் மங்கள சமர வீர கலந்துகொண்டு அடிக்கல் நாட்டிவைத்தார். இந் நிகழ்வில் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன்,சிறுவர் விவகார இராஜங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் மாகாணசபை அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம்,மாகாணசபை உறுப்பினர்கள் பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர்.

