பிழையான பொருளாதார கொள்கையே நெருக்கடிக்கு காரணம் – ஜனாதிபதி

315 0

indexகடந்த பல வருடங்களாக நாட்டில் பின்பற்றப்பட்ட பிழையான பொருளாதார கொள்கையின் விளைவுகளை தற்போது பொது மக்கள் அனுபவிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் 17வது பொருளாதார மாநாடு இன்று கொழும்பில் ஆரம்பமானது.

இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போது ஜனாதிபதி இதனைக் கூறியுள்ளார்.

கடந்த அரசாங்கத்தின் கீழ் பின்பற்றப்பட்ட பொருளாதார கொள்கையும், பெற்றுக் கொள்ளப்பட்ட அதிக கடன்களும் நாட்டின் பொருளாதாரத்தை பின்தள்ளி இருக்கிறது.

இதனால் மக்கள் துன்பமடைந்துள்ளனர்.

மக்களுக்கு சுமையை ஏற்படுத்தாத வகையில் நாட்டின் பொருளாதரத்தை முன்கொண்டு செல்ல வேண்டும் என்றும் ஜனாதிபதி இதன்போது தெரிவித்துள்ளார்.