தொடரூந்து சேவை தொழிற்சங்கங்கள் அடையாள பணிப் புறக்கணிப்பு போராட்டம் தொடர்பில் அறிவிப்பு

254 0

தொடரூந்து சேவையை அங்கத்துவப்படுத்தும் தொழிற்சங்கங்கள் சிலவற்றின் சேவையாளர்கள் எதிர்வரும் 4 ஆம் திகதி நள்ளிரவு முதல் ஒருநாள் அடையாள பணிப் புறக்கணிப்பை மேற்கொள்ளவுள்ளனர்.

தொடரூந்து தொழிற்பாட்டு கண்காணிப்பு அதிகாரிகளின் தொழிற்சங்க கூட்டமைப்பின் இணைப்பாளர் லால் ஆரியரத்ன இதனை தெரிவித்துள்ளார்.

இந்த பணிப்புறக்கணிப்புக்கு தொடரூந்து சாரதிகள், நிலைய அதிபர்கள் மற்றும் கட்டுப்பாட்டாளர்கள் ஆதரவு வழங்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

வேதன பிரச்சினை மற்றும் ஓய்வு பெறும் வயதெல்லையை 63 ஆக அதிகரிக்குமாறு கோரியே இந்த பணிப்புறக்கணிப்பு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.