புதிய வெளிவிவகார அமைச்சர் குற்றப் புலனாய்வு பிரிவில் முறைப்பாடு

292 0

தமது கடமைகளை இன்று உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்ற வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க, குற்றப் புலனாய்வு பிரிவில் முறைப்பாடொன்றை செய்துள்ளார்.

டுவிட்டர் வலைதளத்தில் தமது பெயரில் கணக்கொன்றை ஆரம்பித்துள்ளவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு கோரியே அவர் இந்த முறைப்பாட்டைச் செய்துள்ளார்.

இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உயிரிழந்துவிட்டதாக குறித்த டுவிட்டர் கணக்கிலிருந்து வெளியான தகவலொன்றையடுத்தே அந்த டுவிட்டர் கணக்கு குறித்த தகவல்வெளியாகியது.

இதேவேளை, வெளிவிவகார அமைச்சு மற்றும் அதன் பேச்சாளர் மஹேஷினி கொலொன்னேயின் உத்தியோகபூர்வ டுவிட்டர் கணக்கினூடாக அதை உறுதிப்படுத்தும் வகையில் செய்தி வெளியாகியுள்ளது.

எவ்வாறிருப்பினும், வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்கவின் பெயரில் இருந்த அந்த டுவிட்டர் கணக்கு போலியானது என்பது அவர்களாலேயே வெளிப்படுத்தப்பட்டுள்ளது.