சட்டவிரோத அகதிகளை தடுப்பது தொடர்பில் இலங்கை – அவுஸ்ரேலியா கலந்துரையாடல்

256 0

அவுஸ்திரேலியா சென்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் அவுஸ்ரேலிய பிரதமர் மெல்கம் டேர்ன்புல்லுக்கும் இடையிலான சந்திப்பு இன்று காலை நடைபெற்றது.

இதன்போது அவுஸ்ரேலியாவிற்கு சட்டவிரோதமாக வரும் அகதிகளை தடுப்பது தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே இரு தரப்பு உறவுகள் குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, பாதுகாப்பு, விஞ்ஞானம், தொழில்நுட்பம், பொருளாதார அபிவிருத்தி மற்றும் மருத்துவ ஆராய்ச்சி போன்ற விடயங்கள் தொடர்பிலும் முக்கிய கவனம் செலுத்தப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.