இன மற்றும் மத ரீதியான வன்முறைகளை தடுக்குமாறு, அனைத்து காவற்துறை நிலையப் பொறுப்பதிகாரிகளுக்கும் உத்தரவு

296 0

இன மற்றும் மத ரீதியான வன்முறைகள் இடம்பெறுவதை தடுக்குமாறு, அனைத்து காவற்துறை நிலையப் பொறுப்பதிகாரிகளுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

காவற்துறை மா அதிபரால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, மதரீதியான வன்முறைகளை துண்டும்வகையில் செயற்படும் குழுக்களை கட்டுப்படுத்த விசேட காவற்துறைப் பிரிவு ஒன்று நியமிக்கப்படவுள்ளதாக அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரதமரின் உத்தரவிற்கமைய சட்ட ஒழுங்குகள் அமைச்சு இதற்கான நடவடிக்கையை எடுத்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த பிரிவில் அதிகாரமிக்க காவற்துறை அதிகாரிகள் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.

இந்த குழு, மதரீதியான தாக்குதல்கள் உள்ளிட்ட வன்முறைகள் தொடர்பில் விசாரணை நடத்தவும், அதனைக் கட்டுப்படுத்தவும் ஈடுபடுத்தப்படவுள்ளது.

இதற்கிடையில், இவ்வாறான இன மற்றும் மதரீதியான வன்முறைகள் குறித்த புலனாய்வு அறிக்கை ஒன்று, அடுத்த வாரம் ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு கையளிக்கப்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது.