ஊடக அமைச்சின் மூன்று நிறுவனங்களை தனக்கு தருமாறு கயந்த கோரிக்கை

213 0

ஊடக அமைச்சின் கீழ் இயங்கி வரும் மூன்று நிறுவனங்களை தனது புதிய அமைச்சின் கீழ் கொண்டு வருமாறு  ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

நல்லாட்சி அமைச்சின் ஊடகத்துறை அமைச்சராக இருந்த கயந்த கருணாதிலக்க அண்மையில் இடம்பெற்ற அமைச்சரவை மாற்றத்தின்போது காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சராக நியமனம் பெற்றுள்ளார்.

இதன் காரணமாக ஊடக அமைச்சுப் பொறுப்பில் அவர் இருந்தபோது அவரது அமைச்சின் கீழ் இருந்த நிறுவனங்கள் தற்போது புதிய அமைச்சரான மங்கள சமரவீரவின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.

எனினும் ஊடக அமைச்சின் கீழ் உள்ள தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனம், அரசாங்க அச்சகம் மற்றும் அரசாங்க அச்சக கூட்டுத்தாபனம் ஆகிய நிறுவனங்களை தனது புதிய அமைச்சின் கட்டுப்பாட்டில் வைத்திருக்க உதவுமாறு அமைச்சர் கயந்த கருணாதிலக்க ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கலந்துரையாடி ஒரு தீர்மானத்துக்கு வருமாறு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன