ஹெரோயினுடன் நபர் ஒருவர் கைது

220 0

தெமட்டகொட பிரதேசத்தில் 2 கிராம் 100 மில்லி கிராம் ஹெரோயினுடன் நபர் ஒருவர் போதை பொருள் ஒழிப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு ஒன்றின் போதே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த நபர் இன்று மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.