ஞானசார தேரரை கைது செய்ய பொலிஸ் குழுக்கள் களத்தில்

256 0

பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரரை கைது செய்ய பொலிஸ் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொலிஸ் அதிகாரிகளின் கடமைக்கு இடையூறு ஏற்படுத்துதல், இனங்களுக்கிடையில் ஒற்றுமையை சீர்குலைக்கும் விதத்தில் பேசுதல் என்பன தொடார்பில் இவரை கைது செய்ய பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

இதேவேளை, பொலிஸாரின் கோரிக்கைக்கு அமைய நீதிமன்றம் ஞானசார தேரருக்கு வெளிநாடு செல்ல தடை விதித்துள்ளமை குறிபிடத்தக்கது.

மேலும் அவருக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டுள்ள முறைபாடுகள் தொடர்பாக வாக்குமூலம் பெற்றுக்கொள்ள திட்டமிடப்பட்ட குற்றப் பிரிவுக்கு அழைத்திருந்த போதிலும் அவர் ஆஜராகவில்லை என பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்