தாயின் நீண்டகால பாசம் இன்றி தொடர்ச்சியாக வேதனைகளை சந்தித்து வந்த மாணவி ஒருவர் மன்னாரில் புகையிரதத்துக்கு முன்னாள் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நேற்று மாலை
இடம்பெற்றுள்ளது.
கொழும்பில் இருந்து மன்னார் நோக்கி பயணித்த புகையிரதத்தில் பாய்ந்து குறித்த மாணவி உயிரிழந்துள்ளதாக தெரிய வருகின்றது.
உயிரிழந்த மாணவி மன்னாரில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் உயர் தரத்தில் கல்வி கற்கும் மாணவி என தெரியவந்தள்ளது.
தனது சொந்த இடமான முழங்காவில் பகுதிக்குச் சென்று விட்டு மீண்டும் மன்னார் உப்புக்களம் பகுதியில் உள்ள தனது உறவினர் ஒருவரின் வாடகை வீட்டிற்குச் சென்ற போதே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த மாணவி தனது வேதனைகள் உள்ளடங்கிய கடிதம் ஒன்றை சுமார் 3 பக்கத்தில் எழுதிய நிலையில் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இதன் போது மாணவி உடல் சிதறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.