ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கென்பரா தேசிய தாவரவியல் பூங்காவுக்கு விஜயம்

325 0

அவுஸ்திரேலியா சென்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று கென்பராவிலுள்ள தேசிய தாவரவியல் பூங்காவுக்கு விஜயம் செய்தார்.

ஜனாதிபதியை கென்பராவின் சட்டமா அதிபர் கோல்டன் ரம்சே வரவேற்றதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

அவுஸ்திரேலியாவுக்கான தமது விஜயத்தை நினைவு கூரும் வகையில் குறித்த பூங்காவில் ஜனாதிபதி மகோகனி மரக்கன்றொன்றை நாட்டியதாகவும் குறிப்பிட்டுள்ளது.

இதன்பின்னர், ஜனாதிபதி அவுஸ்திரேலிய தேசிய பல்கலைகழகத்தில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள உணவு பொருள் பரிசோதனை நிலையத்தை பார்வையிட்டுள்ளார்.