ஏறாவூர் பகுதியிலிருந்து மீன்பிடிக்கச் சென்ற 19 படகுகள் மாயம்

255 0

ஏறாவூரில் மீன்பிடிக்க கடலுக்கு சென்ற 19 சிறிய மீன்பிடிப் படகுகள் காணாமல் போயுள்ளன.

குறித்த மீன்பிடி படகுகளை தேடும் பணிகளை இலங்கை கடற்படை ஆரம்பித்துள்ளதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் லெப்டினன் சமிந்த வலாகுளுகே தெரிவித்துள்ளார்.

புண்ணக்குடா பகுதியிலிருந்து சென்ற 9 படகுகளும், சவ்கடே பகுதியிலிருந்து சென்ற 10 படகுகளும் இவ்வாறு காணாமல் போயுள்ளதாக கடற்படை மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.