முல்லைத்தீவில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் ஏற்பாடு செய்த ஊடகவியலாளர் சந்திப்பு (காணொளி)

426 0

முல்லைத்தீவு மாவட்ட தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தால், வருடம்தோறும் தமது வேலைத்திட்டம் தொடர்பில் இளைஞர்களை தெளிவுபடுத்த ஊடகவியலாளர் சந்திப்பு நடத்தப்பட்டு வருகின்றது.

அந்த வகையில் இவ்வருடத்தில் இதுவரை நடைமுறைப்படுத்தப்பட்ட வேலைத்திட்டங்கள் மற்றும் எதிர்வரும் காலங்களில் நடைமுறைப்படுத்தவுள்ள வேலைத்திட்டங்கள் தொடர்பில் ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது.

இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் தேசிய இளைஞர் சேவைகள் மன்ற முல்லைத்தீவு மாவட்ட உதவிப் பணிப்பாளர் திருமதி கு.சறோஜா, மாவட்ட இளைஞர் சேவை அதிகாரி மா.சசிக்குமார், முல்லைத்தீவு மாவட்ட சம்மேளன தலைவர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.