பாடசாலை மாணவிகள் மற்றும் பெண்களை வீடியோ எடுத்த நபரொருவர் கைது

237 0

மஹரகமையில் மகளீர் பாடசாலை ஒன்றுக்கு முன்னாள் நின்று பாடசாலை மாணவிகள் மற்றும் வீதியில் சென்ற பெண்களை தனது கையடக்க தொலைபேசி மூலம் காணொளி பதிவு செய்த நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மாணவிகளின் பெற்றோர்களினால் மஹரகமை காவற்துறையில் மேற்கொண்ட முறைப்பாட்டுக்கு அமைய குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளவர் கட்டுநாயக்க விமானப் படைத் தளத்தில் சேவை புரியும் 28 வயதான விமானப் படை வீரர் என தெரியவந்துள்ளது.

அந்த நபர் கைது செய்யப்பட்ட பின்னர் அவரின் கையடக்க தொலைபேசியை பரிசோதனை செய்த போது இவ்வாறு காணொளி பதிவு செய்யப்பட்டுள்ள பெண்கள் மற்றும் பாடசாலை மாணவிகளின் காணொளிகள் பல இருந்துள்ளமை தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர் இன்று நுகேகொட நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.