கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்டு இளைஞர் ஒருவர் கொலை

256 0

பள்ளம – அடம்பன பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்டு இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

குறித்த தாக்குதலின் போது  படுகாயமடைந்துள்ள இளைஞர், வீதி ஒன்றில் விடப்பட்டு செல்லப்பட்டுள்ள நிலையில், காவற்துறை குறித்த இளைஞரை சிலாப மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

சிகிச்சை பெற்று வந்த இளைஞர் உயிரிழந்துள்ளதாக மருத்துவமனை பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

29 வயதுடைய இளைஞரே இதன்போது  உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், சந்தேக நபரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை காவற்துறை முன்னெடுத்துள்ளது.