சிறீலங்காவில் வாழும் பௌத்தர்கள் ஒரே சீனா என்ற கொள்கையையே ஆதரிக்கின்றனர்

331 0

asgiriya-mahanayake-theroசிறீலங்காவில் வாழும் பௌத்தர்கள் ஒரே சீனா என்ற கொள்கையையே ஆதரிக்கின்றனர் என அஸ்கிரிய பீடாதிபதி வண.வரகாகொட ஞானரத்தன தேரர் தெரிவித்துள்ளார்.

கடந்த வாரம் கொழும்பிலுள்ள சீனத் தூதுவர் யி ஷியான்லியாங், அஸ்கிரிய பீடாதிபதியைச் சந்தித்த போதே தாம் ஒரே சீனா என்ற கொள்கையை ஆதரப்பதாகவும், அதனையே சிறீலங்காவில் வாழும் பௌத்தர்களும் கடைப்பிடிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன், ஒரே சீனா என்ற கொள்கையில் உறுதிப்பாட்டுடன் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளதாகவும், சீனத் தூதரக பேச்சாளர் ஷாங் நய்கி கூறினார்.

மேலும், மதம் என்ற போர்வையில் எந்தவொரு சக்தியும் சீனாவைப் பிளவுபடுத்த அஸ்கிரிய பீடம் அனுமதிக்காது எனவும் அஸ்கிரிய பீடாதிபதி வாக்குறுதியளித்துள்ளார்.

பொருத்தமான நேரம் வரும்போது, சீனாவுக்கு பயணம் மேற்கொள்ளுமாறு அஸ்கிரிய பீடாதிபதிக்கு சீனத் தூதுவர் அழைப்பு விடுத்துள்ளார்.