புனர்வாழ்வு பெற்று விடுதலையான தமிழீழ விடுதலைப்புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் சுகவீனமடைந்து மரணமடைவது தொடர்பில் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளமை குறித்து விசாரணை நடத்தப்படும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.
சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன அமைச்சரவை தீர்மானத்தை அறிவிக்கும் ஊடக சந்திப்பின் போது இன்று இதனை தெரிவித்தார்.
ஊடகவியலாளர் ஒருவர் இந்தவிடயம் தொடர்பாக அமைச்சரிடம் கேள்வி எழுப்பினார்.
பதிலளித்த அமைச்சர் விடுதலைப்புலிகளின் மகளீர் அணி தலைவியாக இருந்த தமிழினி தாம் எழுதிய நூலில் பல விடயங்களை வெளியிட்டிருக்கிறார்.
அவ்வாறு தகவல்களை வெளியிட்ட தமிழினி புனர்வாழ்வு பெற்ற போது படையினரால் இது தொடர்பான சம்பவங்கள் இடம்பெற்றிருந்தால் அது தொடர்பில் நிச்சயமாக தெரிவித்திருந்திருப்பார்.
ஆனால் அந்த நூலில் அவ்வாறான எவ்வித சம்பவங்கள் குறித்தும் குறிப்பிடப்படவில்லை என அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
இதன்போது குறுக்கிட்ட இராணுவ பேச்சாளர், புனர்வாழ்வு பெற்ற போது, விடுதலைப்புலி உறுப்பினர்களுக்கு அவர்கள் விடுதலையான பின், மரணமாகும் வகையில் வதைகள் மேற்கொள்ளப்பட்டன என்பதை முழுமையாக மறுப்பதாக குறிப்பிட்டார்.
ஆசிரியர் தலையங்கம்
-
ஜேர்மன் ஒற்றுமை தின வரவேற்பு நிகழ்வில் சஜித் பிரேமதாச பங்கேற்பு
October 3, 2025 -
நீதிக்கெதிரான மொழிச் சதி!
October 3, 2025
தமிழர் வரலாறு
-
கேணல் கிட்டுவின் வீரகாவியம்
January 17, 2025 -
முன்னால் கடல் பின்னால் நிலம்! தளபதி ஜெயம்
December 6, 2024
கட்டுரைகள்
-
மன்னார் மக்களின் வாழ்வாதாரப்போராட்டம்
October 7, 2025 -
ஏமாற்றப்பட்ட தேசத்தின் கண்ணீர்: ஈழத் தமிழர்களின் அரசியல் பயணம்
September 27, 2025
எம்மவர் நிகழ்வுகள்
-
மாவீரர் நினைவு சுமந்த உள்ளரங்க உதைபந்தாட்டுப் போட்டி -சுவிஸ்,30.11.2025
November 20, 2025 -
தமிழ்த்திறன் போட்டி 2025- யேர்மனி
November 17, 2025

