மன்னார் மர்மக் கிணற்றில் மனித எச்சங்கள்

392 0

download-1மன்னார் திருக்கேதீஸ்வரத்தில் மனிதப் புதைகுழிக்கு அருகில் இருந்த மர்மக் கிணறு தோண்டும் நடவடிக்கை நேற்று (திங்கட்கிழமை) ஆரம்பமாகியது.

மீண்டும் இன்று செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணிக்கு கிணறு தோண்டும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதில் மனித எச்சங்கள் எனச் சந்தேகிக்கப்படும் சில எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

குறித்த மர்ம கிணறு 37 அடி ஆளம் கொண்டதாக இருக்கலாம் என அகழ்வுப் பணிகளில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.கிணறு தோண்டும் பணியானது மன்னார் மாவட்ட நீதவான் முன்னிலையிலேயே இடம்பெறுகின்றது.