7500 அகதிகளை வெளியேற்ற அவுஸ்திரேலியா முடிவு

413 0

அவுஸ்­தி­ரே­லி­யாவில் சட்­ட­வி­ரோ­த­மாக தங்­கி­யுள்ள சுமார் 7500 அக­தி­களை வெளி­யேற்ற முடிவு செய்­துள்­ள­தாக அந்­நாட்டு குடி­யு­ரிமை அமைச்சர் தெரி­வித்­துள்ளார்.

அந்த நாட்டில் இலங்கை, மியான்மர், ஆப்­கா­னிஸ்தான் ஆகிய நாடு­களைச்சேர்ந்­த­வர்கள் அகதிகளாக தஞ்­ச­ம­டைந்­துள்­ளனர்.

முறை­யான கார­ணங்கள் இல்­லாமல் சிலர் தங்­கி­யி­ருப்­ப­தா­கவும், இவர்­களால் அர­சுக்கு பெரும் நிதிச்­சுமை ஏற்­ப­டு­வ­தா­கவும் பல்­வேறு கட்­சி­யினர் குற்றம் சாட்டி வந்­தனர்.

இந்­நி­லையில், அக­தி­க­ளாக பதிவு செய்­வ­தற்கு போலி­யான கார­ணங்­களை அளித்து சட்­ட­வி­ரோ­த­மாக அங்கு தங்­கி­யி­ருக்கும் சுமார் 7500 பேரை நாட்டை விட்டு வெளி­யேற்ற முடி­வெ­டுத்­துள்­ள­தாக அந்­நாட்டு குடி­யு­ரிமை அமைச்சர் பீட்டர் டட்டன் தெரி­வித்­துள்ளார்.

2013ஆம் ஆண்­டுக்கு முன்னர் ஐந்­தாண்டு காலத்தில் வந்த சுமார் 50,000 பேரில், 20,000 பேருக்கு அப்­போ­தைய தொழி­லாளர் கட்சி அரசு புக­லிடம் அளிக்க முடிவு செய்­தது.

மேலும் 30,000 பேரின் நிலை குறித்து அச்சம் எழுப்­பி­யி­ருந்­தது. இந்­நி­லையில், அவர்­களில் சுமார் 7,500 பேர் முறை­யான காரணம் இல்­லாமல் அகதிகள் அந்தஸ்து பெற முயல்வதாகத் தெரியவந்துள்ளதால் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.