வவுனியாவில், சுகாதார தொண்டர்களின் கவனயீர்ப்பு போராட்டம் 20 ஆவது நாளாகவும்…. (காணொளி)

323 0

 

நிரந்தர நியமனம் வழங்குமாறு கோரி கடந்த 4 ஆம் திகதி, வவுனியா பிராந்திய வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு முன்பாக, வவுனியா சுகாதார தொண்டர்கள் ஆரம்பித்த கவனயீர்ப்பு போராட்டம் 20 ஆவது நாளாகவும் இடம்பெற்று வருகின்றது.

வடக்கு மாகாணத்தில் கடந்த 15 வருடங்களுக்கு மேலாக பணியாற்றிய சுகாதார தொண்டர்கள் இந்த கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

இந்நிலையில் நிரந்தர நியமனம் வழங்கப்படும் வரை போராட்டத்தை கைவிடப் போவதில்லை என சுகாதார தொண்டர்கள் தெரிவித்துள்ளனர்.