நற்பண்புகளையும் ஆன்மீக கற்பித்தலையும் கொண்ட கல்வி முறை தொடர்பில்….(காணொளி)

278 0

இந்தியா கேரளா மாநிலத்தில் அமைந்துள்ள ஆனந்தா ஆச்சிரம தலைவர்களினால் வழிகாட்டலின் கீழ் நற்பண்புகளையும் ஆன்மீக கற்பித்தலையும் கொண்ட கல்வி முறை தொடர்பில் மட்டக்களப்பு கல்வி வலய பாடசாலை மாணவர்களுக்கு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன.

கல்வி முறையினை பரப்புவதற்கான ஆன்மீக பயிற்சி கருத்தரங்குகள் மட்டக்களப்பு மயிலம்பாவெளி கருணாலயத்தின் ஏற்பாட்டில், மட்டக்களப்பு கல்வி வலய அலுவலகத்தின் ஆதரவுடன், மட்டக்களப்பு கல்வி வலய பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.

அதனடிப்படையில் “என்னில் இருந்து எமக்கு எனும் தலைப்பின் கீழ் கல்வி முறையை பரப்புவதற்கான பாடத்தோடு இனைந்த நற்பண்புகளையும், ஆன்மீக கற்பித்தலையும் கொண்ட பயிற்சிகள் மட்டக்களப்பு கொக்கட்டிசோலை இராமகிருஷ்ண வித்தியாலய மாணவர்களுக்கு, மயிலம்பாவெளி கருணாலயத்தில் இன்று நடைபெற்றது.

இந்த பயிற்சி கருத்தரங்கில் இந்தியா சென்னை தாயுள்ளம் அமைப்பின் திட்ட பணிப்பாளர் கார்த்திக்குமார், அதன் ஆலோசனை ஆசிரியர்களான திருமதி சித்ரா கார்த்திக்குமார், திருமதி சுகுணா கிரண் ஆகியோர் கலந்துகொண்டு பயிற்சிகளை வழங்கியுள்ளனர்.