அமைச்சரவை மாற்றம் தொடர்பில் இன்று காலை முதல் ஜனாதிபதி செயலகத்தில் விஷேட கூட்டம் ஒன்று இடம்பெற்று வருகின்றது,
இதன் போது நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க மற்றும் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர ஆகியோர் இப்போது வகித்து வரும் அமைச்சுப் பதவிகளை இழக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கி்ன்றன.
அலரி மாளிகையில் நேற்று பின்னிரவு நடந்த ஐதேக பாராளுமன்றக் குழுக் கூட்டத்தில், இன்றைய அமைச்சரவை மாற்றத்தின் போது இடம்பெறவுள்ள மாற்றங்கள் தொடர்பான பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சில விபரங்களை வெளியிட்டுள்ளார்.
நிதியமைச்சராக மங்கள சமரவீரவும், வெளிவிவகார அமைச்சராக ரவி கருணாநாயக்கவும் பொறுப்பேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதேவேளை, அமைச்சரவை மாற்றத்தின் போது, வெளிவிவகார அமைச்சர் பதவியை ரவி கருணாநாயக்க ஏற்க மறுத்திருப்பதாக பிந்திய தகவல் ஒன்று தெரிவிப்பதாக ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இதனிடையே சிறிலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த அமைச்சர்கள் சிலரும் மாற்றப்படவுள்ளனர்.
இந்த மாற்றங்கள் தொடர்பாக நேற்று ஜனாதிபதியும் பிரதமரும் கலந்துரையாடியிருந்தனர். எனினும், இறுதி நேர மாற்றங்களுக்கு வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது
- Home
- முக்கிய செய்திகள்
- அமைச்சரவை மாற்றம்: ரவி, மங்களவின் பதவிகள் பறிப்பு?
ஆசிரியர் தலையங்கம்
-
ஜேர்மன் ஒற்றுமை தின வரவேற்பு நிகழ்வில் சஜித் பிரேமதாச பங்கேற்பு
October 3, 2025 -
நீதிக்கெதிரான மொழிச் சதி!
October 3, 2025
தமிழர் வரலாறு
-
கேணல் கிட்டுவின் வீரகாவியம்
January 17, 2025 -
முன்னால் கடல் பின்னால் நிலம்! தளபதி ஜெயம்
December 6, 2024
கட்டுரைகள்
-
மன்னார் மக்களின் வாழ்வாதாரப்போராட்டம்
October 7, 2025 -
ஏமாற்றப்பட்ட தேசத்தின் கண்ணீர்: ஈழத் தமிழர்களின் அரசியல் பயணம்
September 27, 2025
எம்மவர் நிகழ்வுகள்
-
மாவீரர் நினைவு சுமந்த உள்ளரங்க உதைபந்தாட்டுப் போட்டி -சுவிஸ்,30.11.2025
November 20, 2025 -
தமிழ்த்திறன் போட்டி 2025- யேர்மனி
November 17, 2025

