மஹியங்கனை – கொடிகமுவ சந்தியில் இடம்பெற்ற உந்துருளி விபத்தில் பாடசாலை மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இன்று காலை 14 வயதுடைய மாணவர் பயணித்துள்ள உந்துருளி, வீதியில் உள்ள மரம் ஒன்றுடன் மோதுண்டு உயிரிழந்துள்ளார்.
மஹியங்கனை – கந்தகெடிய பிரதேசத்தினை சேர்ந்த பாடசாலை மாணவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த மரத்துடன் மோதுண்டு, இதற்கு முன்னரும் 2 இளைஞர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் கந்தகெடிய காவற்துறை விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.

