குருநாகல், மல்லவபிட்டிய ஜும்மா பள்ளிவாசல் மீது இனந்தெரியாத நபர்களினால் பெற்றோல் குண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்த தாக்குதல் இன்று அதிகாலை 03:30 அளவில் நடத்தப்பட்டுள்ளது.இதன்போது மூன்று பெற்றோல் குண்டுகள் வீசப்பட்டுள்ளதாகவும் அதில் ஒன்றுமாத்திரமே வெடித்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது.
ஆறு பேர் கொண்ட கும்பல் ஒன்றினால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.இதனால் பள்ளிவாசலின் கண்ணாகள் சேதமடைந்துள்ளதாக குறிப்பிடப்படுகிறது

