வெள்ளவத்தை அனர்த்தம் – கட்டிடத்தின் உரிமையாளர் கைது

286 0
வெள்ளவத்தையில் அனர்த்தம் இடம்பெற்ற கட்டிடத்தின் உரிமையாளர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
காவல் நிலையத்தில் சரணடைந்ததையடுத்தே அவர் கைதுசெய்யப்பட்டதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
வெள்ளவத்தையில் சாலிமன் வீதியிலுள்ள ஐந்து மாடி கட்டிடம் ஒன்று கடந்த 18 ஆம் திகதி சரிந்து வீழ்ந்ததில் 23 பேர் காயமடைந்துடன், அவர்களில் இரண்டு பேர் உயிரிழந்தனர்.
இந்தக் கட்டிடமானது, அனுமதியின்றி நிர்மாணிக்கப்பட்டுள்ளதாக விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.
தற்போது ஐந்து மாடிகள் நிர்மாணிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்ற இந்தக் கட்டிடத்தில் மேலும் இரண்டு மாடிகள் நிர்மாணிக்கப்படவிருந்த நிலையில், இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.