தமிழின அழிப்புக்கு நீதி கோரி பேர்லின் தலைநகரில் நடைபெற்ற கவனயீர்ப்பு நிகழ்வு

404 0

முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்ட உறவுகளையும்,இறுதிக்கணம் வரை எமது மண்ணுக்காய் தமது உயிர்களை அர்ப்பணித்த மாவீரர்களின் நினைவுகூரும் வகையிலும், தமிழின அழிப்புக்கு பன்னாட்டு ரீதியாக நீதிகோரும் வகையிலும் யேர்மன் தலைநகரில் கவனயீர்ப்பு நிகழ்வு நேற்றைய தினம் நடைபெற்றது. நிகழ்வில் கலந்துகொண்ட மக்கள் படுகொலை செய்யப்பட்டவர்களுக்கு மலர்வணக்கம், சுடர்வணக்கம் செலுத்தி வணங்கினர்.தமிழின அழிப்பை பல்லின மக்களுக்கு எடுத்துரைக்கும் வகையில் பாரிய பதாதைகளை தாங்கியவண்ணம் , துண்டுப்பிரசுரங்களையும் விநியோகித்து ஒலிபெருக்கியிலும் வாசித்தனர்.தமிழீழ விடுதலையை வென்றெடுக்கும் வரை ஓயாது உறுதி குலையாது தொடர்ந்து போராடுவோம் என உறுதி மொழியுடன் கவனயீர்ப்பு நிகழ்வு நிறைவுற்றது.