ஜனாதிபதிக்கும் அமைச்சர்களுக்கும் இடையிலான முக்கிய சந்திப்பு நாளை

372 0

தேசிய அரசாங்கத்தின் அமைச்சர்களுக்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான முக்கிய சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் நாளை காலை 8.30 அளவில் இந்தச் சந்திப்பு இடம்பெறவுள்ளது.

இதில் பங்கேற்க அமைச்சர்கள், இராஜாஙக அமைச்சர்கள் மற்றும் பிரதியமைச்சர்கள் ஆகிய அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சரவை மாற்றம் இடம்பெறவுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகின்ற நிலையில், இந்தக் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.