உள்நாட்டு உற்பத்தியாளர்களுக்கு சிறந்த வாய்ப்பு-ஹர்ஷ டி சில்வா

224 0

ஜி.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகை இலங்கைக்கு மீண்டும் கிடைத்ததால் உள்நாட்டு உற்பத்தியாளர்களுக்கு சிறந்த வாய்ப்பு ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.வெளிவிவகார பிரதி அமைச்சர் ஹர்ஷ டி சில்வா இதனைத் தெரிவித்துள்ளார்.

ஆடை தொழில்த்துறையில் மாத்திரம், முதல் வருடத்தில் 400 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானம் கிடைக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

2010ஆம் ஆண்டு இடைநிறுத்தப்பட்ட ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை நேற்று முதல் மீண்டும் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.