அதிபர்களுக்கு அதிகரிக்கப்பட்ட கொடுப்பனவை வழங்க வேண்டும்

372 0

2017 – 16 சுற்றரிக்கையின் படி அதிபர்களுக்கு அதிகரிக்கப்பட்ட கொடுப்பனவை வழங்குவதற்கு கல்வித்துறை அதிகாரிகள் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என்று இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் குற்றம் சுமத்துகிறது.

கொடுப்பனவை அதிகரிக்குமாறு சுற்றரிக்கை வௌியிடப்பட்டுள்ள போதிலும் கல்வியமைச்சினால் அதனை இடைநிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் கூறியுள்ளார்.

கொழும்பு வலய தேசிய பாடசாலைகளின் ஆசிரியர்களுக்கு ஒரு மாதம் மாத்திரம் அந்தக் கொடுப்பனவு வழங்கப்பட்ட போதிலும் தற்போது அது குறைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

குறித்த சுற்றரிக்கை படி அதிகரிக்கப்பட்ட கொடுப்பனவை நாட்டிலுள்ள பாடசாலைகளின் அனைத்து அதிபர்களுக்கும் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கல்வியமைச்சிடம் கேட்டுக் கொள்வதாக ஜோசப் ஸ்டாலின் கூறியுள்ளார்.