சம்பூர் பிராந்திய வைத்தியசாலை திறந்து வைப்பு

304 0

கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் 40 மில்லியன் ரூபாவுக்கும் மேற்பட்ட நிதி ஒதுக்கீட்டில் அமைக்கப்பட்ட திருகோணமலை சம்பூர் பிராந்திய வைத்தியசாலை இன்று (20) காலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் திறந்து வைக்கப்பட்டது.

கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல். முஹம்மட் நஸீரின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், எதிர்க்கட்சித் தலைவர் இரா சம்மந்தன், அமைச்சர் பைஸர் முஸ்தபா, கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்ரின் பெணாண்டோ, கிழக்கு மாகாண முதலமைச்சர் நசீர் அஹமட் உள்ளிட் பல முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டனர்.

இவ்வைதியசாலையை திறந்து வைத்த ஜனாதிபதி, வைத்தியசாலைகளை பார்வையிட்டு, அங்குள்ள மக்களிடமும், ஊழியர்களுடன் உரையாடினார்.