கிளிநொச்சி சம்பவம் – மேற்கொண்டது ஒருவர் என சந்தேகம்

240 0

கிளிநொச்சி – பளை – அரசங்கேணி – கச்சாறு பிரதேசத்தில் காவல்துறை வாகனம் மீது துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டது ஒருவர் என சந்தேகிப்பதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாக விசாரணைக்கு பொறுப்பான சிரேஸ்ட காவல்துறை அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

அந்த துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொள்ள வந்தவர் சென்ற பாதை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்ட இடத்தில் வீழ்ந்து கிடந்த வெடிப்பொருட்களின் பகுதிகள் சிலவும் காவல்துறையினரால் மீட்கப்பட்டுள்ளன.

நேற்று அதிகாலை 12.30 மணியளவில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினருக்கு சொந்தமான வாகனம் ஒன்றின் மீது துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது.

சம்பவம் இடம்பெற்ற போது, குறித்த வாகனத்தில் மூன்று காவல்துறை அதிகாரிகள் பயணித்துள்ள போதிலும் அவர்களுக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை.