கிளிநொச்சி துப்பாக்கி சூட்டு தொடர்பில் பீல்ட் மார்சல் பொன்சேகா கருத்து

466 0

கிளிநொச்சி துப்பாக்கி சூட்டு சம்பவத்தை தேசிய பாதுகாப்பு பிரச்சினையாக கொள்ள வேண்டியதில்லை என பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து அவர் இதனை குறிப்பிட்டார்.

காவல்துறையினர் வானம் மீது தாக்குதல் நடத்தும் சம்பவம் அண்மையில் பிலியந்தலையிலும் இடம்பெற்றது.

களுத்துறை சிறைவாகனம் மீதும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.

இவ்வாறான தாக்குதல்களை மேற்கொள்ளம் பாதாள உலக குழுக்கள் காணப்படுகின்றன.

நாடு முழுவதும் அவர்கள் இருக்க முடியும்.

யாழ்ப்பாணத்திலும் இவ்வாறு பல குழுக்கள் இருக்கின்றன.

குறித்த சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் ஆராய்ந்து சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்வர்.

இந்தநிலையில், இதனை தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்ற எண்ணத் தேவையில்லை என்றும் பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.