திங்­கட்­கி­ழமை காலை 8 மணி முதல் 12 மணி வரையான காலப்­ப­கு­தியில் வேலை­நி­றுத்தம்

305 0

மாலபே தனியார் கல்­லூ­ரிக்கு எதிர்ப்பு தெரி­வித்து நேற்­று­முன்­தினம் மாண­வர்­களால் மேற்­கொள்­ளப்­பட்ட ஆர்ப்­பாட்­டத்தை கலைப்­ப­தற்­காக பொலிஸார் மிலேச்­சத்­த­ன­மாக நடந்­து­கொண்­ட­மைக்கு எதிர்ப்பு தெரி­வித்தும் அர­சாங்­கத்தை கண்­டிக்கும் வகை­யிலும் எதிர்­வரும் திங்­கட்­கி­ழமை காலை 8 மணி­யி­லி­ருந்து 12 மணி வரை­யான காலப்­ப­கு­தியில் வேலை­நி­றுத்த போராட்­டத்தில் ஈடு­ப­ட­வுள்­ள­தாக அர­ச வைத்­திய அதி­கா­ரிகள் சங்கம் அறி­வித்­துள்­ளது.

தொழில்சார் நிபு­ணர்­களின் கேட்போர் கூடத்தில் நேற்று நடை­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் மாநாட்டில் கலந்­து­கொண்டு உரை­யாற்றும் போதே அச்­சங்­கத்தின் செய­லாளர் வைத்­தியர் நவீன்.டி சொய்சா தெரி­வித்தார்.

அவர் மேலும் குறிப்­பி­டு­கையில்,நேற்று முன்­தினம் பல்­க­லைக்­க­ழக மாண­வர்­களின் மீது பொலிஸார் மேற்­கொண்ட தாக்­குதல் சம்­பவம் மற்றும் அர­சாங்­கத்தின் பரா­முகம் என்­ப­வற்றை எம்மால் இனி­மேலும் பொறுத்­துக்­கொண்­டி­ருக்க முடி­யாது.

தற்­போது தேசிய பிரச்­சி­னை­யாக உரு­வெ­டுத்­துள்ள சைட்டம் தனியார் பல்­கலைக்­க­ழ­கத்­துக்­கெ­தி­ரான எதிர்ப்பு நட­வ­டிக்­கை­களை நாடு­மு­ழுவதும் ஆரம்­பித்­துள்ளோம். அவை அனைத்­தையும் அர­சாங்கம் கண்­ணீ ர்ப்­புகை குண்டு கொண்டும் அடா­வ­டித்­த­னத்தை காட்­டியும் அடக்க முயல்­கின்­றது. இது மிகவும் கொடூர­மான தாக்­கு­த­லாகும்.

குறித்த தாக்­கு­தலை கண்­டித்து எதிர்­வரும் திங்­கட்­கி­ழமை காலை 8 மணி­யி­லி­ருந்து 12 மணி வரை­யான காலப்­ப­கு­தியில் வேலை­நி­றுத்த போராட்­டத்தில் ஈடு­ப­ட­வுள்ளோம். எம்­மீது எவ்­வி­த­மான களங்கம் ஏற்­பட்­டாலும் பர­வா­யில்லை. ஆனால் சைட்­டத்தை ஒழித்­தாக வேண்டும். அதன் அபா­யத்தை அனை­வரும் உணர்ந்­தாக வேண்டும்.

இதற்­கென நாம் முன்­னெ­டுத்­துள்ள மாகாண மட்ட  மக்­க­ளுக்கு தெளி­வு­ப­டுத்தும் வேலைத்­திட்­டங்­களை தொட­ர­வுள்ளோம். அரச வைத்­திய அதி­கா­ரிகள் சங்கம் என்ற வகையில் குறித்த தனியார் பல்­க­லைக்­க­ழ­கத்தில் பட்­டப்­ப­டிப்பை மேற்­கொள்­வதில் என்­னென்ன குறை­பா­டுகள் காணப்­ப­டு­கின்­றன என்­பது தொடர்பில் ஏற்­க­னவே பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வி­டமும் எதிர்­க்கட்சி தலை­வ­ரி­டமும் கலந்­து­ரை­யா­டி­யுள்ளோம். எனவே தற்­போது அடுத்­த­கட்­ட­மாக அனைத்து கட்சி தலை­வர்­க­ளையும் சந்­தித்து தெளி­வு­ப­டுத்­தல்­களை மேற்­கொள்ள எமது பொதுக்­குழு தீர்­மா­னத்­தின்­படி  வேலைத்­திட்­டங்­களை ஆரம்பித்துள்ளோம்.

இதன்காரணமாக நாடு முழுவதும் விழிப்புணர்வு வேலைத்திட்டங்களையும் ஆரம்பிக்கவுள்ளோம். நேற்றுமுன்தினம் மாணவர்களால் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டத்தை கலைப்பதற்கு பொலிசார் மிலேச்சத்தனமாக நடந்துகொண்டமைக்கு அரசாங்கம் பதில் கூறியாக வேண்டும் என்றார்.