பிக்கு மாணவன் உட்பட 8 மாணவர்களுக்கு பிணையில் விடுதலை

236 0

சட்டவிரோதமாக செயற்பட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில் கைதுசெய்யப்பட்ட பிக்கு மாணவர் உட்பட 8 மாணவர்களையும் பிணையில் விடுதலை செய்ய கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

நேற்றுமுன்தினம் கொழும்பில் இடம்பெற்ற அனைத்து பல்கலைக்கழக மாணவர்களின் ஆர்ப்பாட்டப் பேரணியின் போது சட்டவிரோதமாக செயற்பட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில் பிக்கு மாணவர் ஒருவர் உட்பட 8 மாணவர்கள்  கைது செய்யப்பட்டனர்.

குறித்த 8 பேரையும் இன்று நீதிமன்றில் பொலிஸார் ஆஜர்படுத்திய போதே பிணையில் விடுதலை செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மாலபே தனியார் மருத்துவ கல்லூரியை தடைசெய்தல் உள்ளிட்ட 15 கோரிக்கைகளை முன்வைத்து அனைத்து பல்கலைக்கழக மாணவர்கள் எதிர்ப்பு பேரணியை மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.