பசிலில் விளக்கமறியல் நீடிப்பு

307 0

2ef5aadf97c692ad679120fde891bf05_XLமுன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஸவின் விளமக்கமறியல் காலம நீடிக்கப்பட்டுள்ளது.
இதன்படி அவரை எதிர்வரும் 8ஆம் திகதி வரையில் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு கடுவளை நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.
திவிநெகும திணைக்களத்தில் இடம்பெற்ற 43 லட்சம் ரூபா நிதிமோசடி தொடர்பில், காவல்துறை நிதிமோசடி விசாரணை பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைக்கு அமைய இவர் கடந்த 18ஆம் திகதி கைது செய்யப்பட்டார்.
இதனிடையே, பசில் ராஜபக்ஸவின் பிணை கோரிய மனுவை எதிர்வரும் 8ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள, கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று தீர்மானித்தது.