சுன்னாகம் படுகொலை வழக்கு தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

227 0
சுன்னாகம் பொலிஸ் நிலைய தடுப்புக்காவல் சித்திரவதை வழக்கில் யாழ் மேல் நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட தீர்ப்புக்கு  எதிராக  நேற்றைய தினம் யாழ் மேல் நீதிமன்றில் மேன் முறையீட்டு மனு  தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் தடுப்புக்காவலில் இருந்த போது இளைஞர் ஒருவர் சித்திரைவதைக்குட்படுத்தப்பட்ட குற்றச்சாட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட 8 பொலிஸாரில், பொலிஸ் பொறுப்பதிகாரி உள்ளிட்ட 6 பொலிஸாரை குற்றவாளிகள் என யாழ் மேல் நீதிமன்றால் அண்மையில் தீர்ப்பளிக்கப்பட்டு   குற்றவாளிகளுக்கு 10 வருட கடூழிய சிறைத்தண்டனை வழங்கப்பட்டது.
இந்த நிலையில குறித்த தீர்ப்பில் சட்ட சிக்கல்கள் உள்ளதெனவும் குறித்த தீர்ப்பினை தள்ளுபடி செய்யுமாறு கோரி மேற்குறித்த தண்டனை விதிக்கப்பட்ட 6 பொலிஸார் சார்பாக சட்டத்தரணி மு.ரெமிடியஸ் மேன் முறையீட்டு மனுவை நேற்றைய தினம் தாக்கல் செய்துள்ளார்.