அடுத்த தேர்தலில் யாருக்கு வெற்றிப்பெற முடியும் – ஜனாதிபதி விளக்கம்

272 0

அனைத்து சமூகங்களுக்கும் நீதியை நிலைநாட்டும் தரப்பினருக்கே அடுத்துவரும் தேர்தலில் வெற்றிபெற முடியும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

பொலனறுவையில் நேற்று இடம்பெற்ற நிகழவொன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

காலி முகத்திடலுக்க வந்திருந்த மக்கள் கூட்டத்தைப் பார்த்து விரைவில் ஆட்சி கவிழும் என கருத்துக்கள் வெளியிடப்படுகின்றன.

அதற்கான சந்தர்ப்பம் ஒருபோதும் ஏற்படுத்தப்படமாட்டாது.

கடந்த காலங்களை போன்று ஆட்சியை கைப்பற்றுவது இலகுவான விடயமாக அமையாது.

இனவாதம் பேசிக்கொண்டு எதிர்வரும் காலங்களில் ஆட்சி அமைக்க முடியாது.

நாட்டில் நல்லிணகத்;தை யார் ஏற்படுத்;துகின்றார்களோ? அவர்களே அனைத்து மக்களையும் இணைத்துக்கொண்டு ஆட்சியொன்றை உருவாக்க முடியும்.

அத்தகையதான ஒரு சூழலை உருவாக்குவதற்கு தமது அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்;டுள்ளார்.