வைத்திய சபைக்குள் கைக்குண்டு தொடர்பில் விசாரணையை கோரியுள்ள சைட்டம்

245 0
இலங்கை வைத்தியசபைக்குள் நேற்று முன்தினம் கண்டெடுக்கப்பட்ட கைக்குண்டுத் தொடர்பில் உடனடி விசாரணையை மேற்கொள்ளுமாறு பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவிடம் சைட்டம் மாணவர்களின் பெற்றோர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் முறையான விசாரணைகள் முன்னெடுக்கப்படும் முன்பே சைட்டத்துக்கு எதிரானவர்கள் இந்த சம்பவத்துடன் சைட்டத்துக்கு தொடர்பு இருப்பதாக வதந்திகளை பரப்பி வருவதாக மாலபே சைட்டம் கல்லூரி மாணவர்களின் பெற்றோர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜயரட்ன தெரிவித்துள்ளார்.
இந்த அவதூறுகளால் சைட்டம் தனியார் கல்லூரியில் கல்வி பயிலும் மாணவர்கள் பாரிய பிரச்சனைகளை சந்தித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.