வடக்கில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு வீடுகளை இழந்த சுமார் 120 குடும்பங்களுக்கு வீடுகளை அமைத்துக்கொடுக்க டுபாய் நாட்டின் செல்வந்த குடும்பம் ஒன்று தனது விருப்பத்தினை தெரிவித்துள்ளதாக வர்த்தக வாணிப அமைச்சு தெரிவித்துள்ளது.
டுபாயின் அபுதாபி நகரைச் சேர்ந்த செல்வந்த குடும்பம் ஒன்றே இவ்வாறு முன்வந்துள்ளதாகவும்,இதுதொடர்பில் ஆராய குறித்த குடும்பத்தைச் சேர்ந்த மூவர் அடங்கிய குழு ஒன்று கடந்த வாரம் மன்னார் பிரதேசத்திற்க விஜயம் செய்திருந்ததாகவும் அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
குறித்த குழுவினருடன் வர்த்தக வாணிப அமைச்சர் ரிசாட் பதியூதினும் சென்றிருந்ததாகவும், இதன்போது வடக்கில் 120 குடும்பங்களுக்கு வீடுகளை அமைத்துக்கொடுக்க இவர்கள் விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் அமைச்சு தெரிவித்துள்ளது.