மன்னார் பாலியாற்று பாலத்தை புனரமைக்குமாறு மக்கள் கோரிக்கை

223 0

மன்னார் மாந்தை மேற்கு பாலியாறு பாலத்தினை விரைவாக அமையுங்கள் என பாலியாறு கிராம பொது அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன. ஏ-32 சாலை புனரமைப்புகள் நிறைவுற்ற நிலையிலும் 2016.11.24ந் திகதி வீதி அதிகார சபையினால் பாலியாறு பாலம் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்ட போதிலும் 2018.06.23ந் திகதி இப்பால வேலைகள் நிறைவு செய்ய வேண்டிய நிலையில் இப்பால வேலைகள் இதுவரை தொடங்கப்படவில்லை எனவும் இனிவரும் மார்கழி மாதத்தில் மழை வெள்ளம் வீதியினைக் குறுக்கறுத்துப் பாயும் போது ஏ-32 வீதி வழியான போக்குவரத்துகள் தடைப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

இந்நிலையில் பாலியாறு பால வேலையினை விரைவாக நிறைவு செய்யுமாறு பாலியாறு கிராம பொது அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன. பால வேலைகள் நடைபெறுகின்ற போது பாலியாற்றின் மேற்குப் பகுதியில் வெள்ள நீர் பரவாமல் மண் அணை அமைக்கும் பணியினையும் முன்னெடுப்பதற்கு மாவட்டத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மாந்தை மேற்கில் பாலியாறு பெருக்கெடுக்கின்ற போது ஐம்பது வரையான குடும்பங்கள் பாலியாற்று மேற்கில் பாதிக்கப்படுவதாகவும் பொது அமைப்புகளினால் தெரிவிக்கப்படுகின்றது.