பிரதமர் ரணில் நாடு திரும்பியதும், அமைச்சரவை மீளமைப்பு?

250 0

சீனாவுக்கு சென்றுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாடு திரும்பியதும், அமைச்சரவை மீளமைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்று அரசாங்க தகவல்கள் வெளியாகியுள்ளன.

அமைச்சரவையின் மீளமைப்புக்கு ஜனாதிபதியும் பிரதரும் உடன்பட்டுள்ளனர்.

இந்தநிலையில் இந்த மாற்றங்கள் நாட்டின் பொருளாதார நலன்கருத்திய மாற்றங்களாக இருக்கும் என்று ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியி;ன் அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர்.

இலங்கையின் சிங்கள மற்றும் ஆங்கில செய்தித்தாள்களின் தகவல்கள்படி அதுவரை அமைச்சரவை கூட்டங்களை நடத்தாதிருக்க ஜனாதிபதி முடிவெடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் இந்த தகவல் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.