மோடியின் வருகை இலங்கை மக்களுக்கு பாரிய நன்மைகள் – அமைச்சர் சஜித் பிரேமதாஸ

685 0

இந்திய பிரதமர் மோடியின் வருகை காரணமாக இலங்கை மக்களுக்கு பாரிய நன்மைகள் கிடைத்துள்ளதாக வீடமைப்புத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

இந்திய பிரதமரின் விஜயத்தின்போது வடக்குகிழக்கு மற்றும் மலையக பகுதிகளுக்கான வீடமைப்புக்களுக்கான உதவி அறிவிக்கப்பட்டது.

அத்துடன் நோயாளர் காவு வாகன சேவையின் விரிவாக்க அறிவிப்பும் வெளியிடப்பட்டது.

எனினும் மக்களுக்கான இந்த நன்மைகளை பொருட்படுத்தாது எதிர்க்கட்சி உறுப்பினர்கள், கறுப்புக்கொடிகளை ஏந்தப்போவதாக எச்சரித்திருந்தமையையும் சஜித் பிரேமதாஸ சுட்டிக்காட்டியுள்ளாhர்.