யேர்மன் தலைநகரத்தில் ஈழத்தமிழர்களின் இனவழிப்பை எடுத்துரைக்கும் மரம்

331 0

முள்ளிவாய்க்கால் இனவழிப்பை நினைவுசுமந்து 2012 ஆண்டு யேர்மனி பெர்லின் நகரில் மிகப் பிரசித்திபெற்ற பூங்காவனத்தில் பாதுகாப்பான பகுதியில் அவர்களின் அனுமதியுடன் அப்பில் மரம் நாட்டப்பட்டது. வலிகள் சுமந்த நாட்களில் இன்றைய தினம் பேர்லின் வாழ் சில உறவுகள் இம் மரத்தை பார்வையிட்டு வணக்கம் செலுத்தினர்.

இப் பூங்காவுக்கு செல்லும் பல்லாயிரக்கணக்கான யேர்மனிய மக்கள் தமிழர்களின் இனப்படுகொலை செய்தியை அறியும் வண்ணம் “எப்படி அந்த மரம் தனது வேர்களை ஆழமாய் வளர்த்து மண்ணுக்குள் நிற்கின்றதோ அதே போல் தாயகத்தில் பல்லாயிரக்கணக்காக படுகொலை செய்யப்பட்ட தமிழ் மக்களின் நினைவுகள் எத்தனை வருடங்கள் சென்றாலும் எமது நெஞ்சத்தில் வேர் ஊண்டி நிற்கும்” . என்ற வாசகம் யேர்மன் மொழியில் பலகையில் பொறிக்கப்பட்டு மரத்தில் இணைக்கப்பட்டுள்ளது. ஈழத்தமிழர்களின் இனவழிப்பை எடுத்துரைக்கும் இம் மரத்தை அகற்றுவதுக்கு சிறீலங்கா தூதரகம் பல தடவை முயற்சி எடுத்து தோல்வியுற்றது குறிப்பிடத்தக்கது.