ஜப்பானில் முதன் முறையாக டோக்கியோ கவர்னராக பெண் தேர்வு

336 0

201608011100015673_Tokyo-elects-first-female-governor_SECVPF (1)ஜப்பானில் டோக்கியோ கவர்னராக முதன் முறையாக பெண் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஜப்பான் தலைநகர் டோக்கியோ நகரில் கவர்னராக இருந்த யோய்சி மசூசோ ஊழல் புகார் காரணமாக தனது பதவியை ராஜினாமா செய்தார். அதையொட்டி அங்கு புதிய கவர்னரை தேர்ந்தெடுக்க தேர்தல் நடந்தது. அதில் யுரிகோ கோய்கி (64) என்ற பெண் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இவர் பிரதமர் ஷின்ஷோ அபேயின் லிபரல் ஜனநாயக கட்சியை சேர்ந்தவர். ஷின் ஷோ அபே அரசில் ராணுவ மந்திரி ஆக இருந்தார்.ஆனால் தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு கட்சி சார்பின்றி சுயேட்சையாக போட்டியிட்டார். இவருக்கு 29 லட்சம் ஓட்டுகள் கிடைத்தன. இதன் மூலம் இவர் அமோக வெற்றி பெற்றார்.

வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டவுடன் மகிழ்ச்சி அடைந்த அவர், முன்பு நடைபெற்ற நிகழ்வுகள் எதுவும் ஏற்படாத வகையில் டோக்கியோவை வழிநடத்துவேன். அதன் மூலம் எப்போதும் கண்டிராக டோக்கியோவை நீங்கள் காண்பீர்கள் என்றார்.

யுரிகோ கொய்கி எகிப்து கெய்ரோ பல்கலைக் கழகத்தில் பட்டப்படிப்பு படித்தார். அரசியலுக்கு வருவதற்கு முன்பு டி.வி நிருபராக இருந்தார். வருகிற 2020-ம் ஆண்டில் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டி நடக்கிறது. இதற்கு முன்பு இருந்த கவர்னர்கள் ஊழல் புகாரில் பதவி இழந்துள்ளனர். அதனால் பண பற்றாக்குறையால் தவிக்கும் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டியை நடத்தி முடிப்பது இவருக்கு ஒரு சவாலான காரியமாக உள்ளது.