பாகிஸ்தானுக்கு ராஜ்நாத் சிங் வருவதை தடுப்பேன்

352 0

201608010947371678_Syed-Salahuddin-Warns-Pakistan-Over-Rajnath-Singh-s-Visit_SECVPFஇந்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங்கின் பாகிஸ்தான் பயணத்துக்கு தீவிரவாதி சையத் சலாவுதீன் எதிர்ப்பு தெரிவித்துள்ளான். இஸ்லாமாபாத் நகரில் நடைபெறும் சார்க் நாடுகளின் உள்துறை மந்திரிகள் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் 2 நாள் பயணமாக வரும் 3-ந் தேதி பாகிஸ்தான் செல்கிறார். மத்திய உள்துறை செயலாளர் ராஜீவ் மெஹ்ரிஷி மற்றும் உள்துறை அமைச்சக மூத்த அதிகாரிகளும் அவருடன் செல்கிறார்கள்.
இந்த மாநாட்டுக்கு இடையே பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப், உள்துறை மந்திரி சவுத்ரி நிசார் அலிகான் உள்பட அனைத்து சார்க் நாடுகளின் உள்துறை மந்திரிகளையும் ராஜ்நாத் சிங் தனித்தனியாக சந்தித்து பேச இருப்பதாகவும் முன்னர் தகவல்கள் வெளியாகியது.

ஆனால், இதுதொடர்பாக வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் விகாஸ் ஸ்வரூப் வெளியிட்டுள்ள டுவிட் செய்தியில், ”இந்திய உள்துறை மந்திரி சார்க் நாடுகள் கூட்டத்தில் கலந்துக்கொள்ள செல்கிறார். அங்கு பாகிஸ்தானுடன் இருதரப்பு சந்திப்பு என்பது கிடையாது,” என்று தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், காஷ்மீரில் படைகளை குவித்து அப்பாவி மக்களை இரத்தம் சிந்த வைத்தவர் ராஜ்நாத் சிங் என்றுகூறி அவரை பாகிஸ்தான் வரவேற்பதற்கு ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாத இயக்கத் தலைவன் சையத் சலாவுதீன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ராஜ்நாத் சிங்கின் பாகிஸ்தான் பயணத்தை தடுக்கப்போவதாகவும் தீவிரவாதி சையத் சலாவுதீன் மிரட்டல் விடுத்துள்ளார்.