எருமை மாட்டை பேட்டி எடுக்கும் பாகிஸ்தான் நிருபர்

323 0

201607311553593515_Pakistani-TV-reporter-Interviews-buffaloes-for-his-news_SECVPF (1)பாகிஸ்தானில் பிரபல பத்திரிக்கையாளர் ஒருவர் வேடிக்கைக்காக எருமை மாட்டிடம் பேட்டி எடுத்த வினோத வீடியோ வெளியாகியுள்ளது.

பாகிஸ்தானின் லாகூர் நகரில் உள்ள மக்கள் சாலை விதிகளை ஒழுங்காக கடைபிடிப்பதில்லை. முக்கியமான விரைவு சாலைகளை கடந்து செல்ல மேம்பாலங்கள் அமைக்கப்பட்டிருந்தும் பெரும்பாலும் இங்குள்ளவர்கள் இரு சாலைகளுக்கு இடையிலான உயரமான தடுப்பு சுவர்களை தாண்டிச் சென்று உயிருக்கு ஆபத்தான நிலையில் சாலைகளை கடக்கின்றனர்.

இங்கு வாழும் ஐந்தறிவுள்ள மாடுகள்கூட மேம்பாலங்களுக்கு செல்லும் படிகட்டுகளில் சாவகாசமாக ஏறியும், இறங்கியும் சென்று சாலைகளை கடக்கும்போது ஆறறிவு கொண்ட மனிதர்கள் சற்று சிரமத்தை தவிர்ப்பதற்காக இப்படி உயிருக்கு ஆபத்தான காரியங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆனால், பாலங்களின் படிகட்டிகளில் மாடுகள் போவதால்தான் நாங்கள் பாலங்களை பயன்படுவதில்லை என ஒருதரப்பினர் கூறுகின்றனர்.

இதுதொடர்பான ஒரு செய்தி தொகுப்புக்காக பாகிஸ்தானின் பிரபல ஜியோ தொலைக்காட்சியில் பத்திரிகையாளராகப் பணியாற்றி வரும் அமின் ஹபீஸ் என்பவர்ம் வீடியோ கேமரா மேனுடன் படப்பதிவில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது, சாலை விதிகளை மதிக்காத மனிதர்களைப் பற்றி அங்கிருந்த எருமை மாட்டிடம் அவர் கருத்து கேட்கும் வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது. கருத்து கேட்பதோடு மட்டுமின்றி எருமை மாட்டின் குரலோசையை இவர் மொழிபெயர்க்கும் அழகு பலரை கவர்ந்துள்ளது.