மனிதநேயமற்று பாராமுகமாக மௌனித்த சர்வதேச நாடுகளிடம், வலிகளை சுமந்த மக்களே மனிதநேயத்தை எடுத்துரைக்கும் செயற்பாடு.

424 0

ஈழத்தமிழர்கள் கொத்து கொத்தாக கொன்றழிக்கப்பட்ட வேளையில் மனிதநேயமற்று பாராமுகமாக மௌனித்த சர்வதேச நாடுகளிடம், வலிகளை சுமந்த மக்களே மனிதநேயத்தை எடுத்துரைக்கும் வகையில் யேர்மனியில், வறுமையின் வலிகளில் துடிக்கும் வேற்றின மக்களுக்கு உதவிக்கரம் நீட்டினர். முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நாட்களை மீள்நினைவுப் படுத்தும் வகையில் யேர்மன் தமிழ் இளையோர் அமைப்பினால் மால் நகரத்தில் இவ்வாறான மனிதநேய செயற்பாடு நேற்றைய தினம் முன்னெடுக்கப்பட்டது.அத்தோடு கொல்லப்பட்ட தாயக உறவுகளை நினைவுகூரும் முகமாக மால் நகர தமிழ் மாணவர்கள் ஒருங்கிணைந்து சுடர்வணக்க நிகழ்வில் இணைந்ததும் குறிப்பிடத்தக்கது.