பிலியந்தலை சம்பவம் தொடர்பில் தேடப்படும் நபர்கள்

301 0
பிலியந்தலையில் கடந்த 9ஆம் திகதி பொலிஸார் மீது துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்கள் இருவரின் புகைப்படங்களை பொலிஸ் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின் போது இதற்கு பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் தெல்கொட பிரதேசத்தில் வைத்து விலைக்கு வாங்குவதற்கு வருகைத்தந்த இரண்டு சந்தேகநபர்களின் புகைப்படங்களை பொலிஸ் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ளது.
சந்தேகநபர்களுள் ஒருவர் 30-35 வயதிற்கு இடைப்பட்டவர் என்பதுடன்,இவர் 5 அடி 3 அங்குல உயரத்துடன் மெல்லிய தேகமுடையவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய மற்றுமொரு நபர் 38 தொடக்கம் 42 வயதுக்கிடைப்பட்டவர் என்பதுடன் இவர் 5அடி 6 அங்குல உயரத்துடன் பருத்த உடலமைப்பை உடையவர் என்றும் பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
எனவே இவர்கள் பற்றிய தகவல் தெரிந்தால் 071-8591641,0112852555 என்ற தொலைபேசி இலக்கம் அல்லது கொழும்பு குற்றப்பிரிவு திணைக்களத்தின் 071-8591727,0112-662323 அல்லது 0112-685151 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு அழைத்து அறிவிக்குமாறும் பொலிஸார் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இதேவேளை குறித்த சம்பவத்தில் பலியான பொலிஸ் உத்தியோகத்திரின் இறுதிக்கிரியைகள் நேற்றைய தினம் நடைபெற்றதுடன்,இங்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் சென்றதோடு,குறித்த பொலிஸ் உத்தியோகத்தருக்கான பதிவி உயர்வினையும் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.