சாதாரண காரியாலய பணியாளருக்கு உள்ள அதிகாரம் கூட தனக்கு இல்லை – சுஜீவ சேனசிங்க

670 0

கட்சி தலைவரின் செயற்பாடு காரணமாக தமக்கு அரசியல் வாழ்க்கையில் வெறுப்புணர்பு ஏற்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார்.

கொலன்னாவ பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் வைத்து அவர் இதனைத் தெரிவித்தார்.

தமது நிலைமையினை கருத்தில் கொண்டு அரசியல் இருந்து ஓய்வு பெறு தீர்மானத்தை மேற்கொள்ளவும் பின்நிற்க போவதில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமது அரசாங்கத்தின் இராஜாங்க அமைச்சர் பதவி வழங்கப்பட்டிருந்தாலும் சாதாரண காரியாலய பணியாளருக்கு உள்ள அதிகாரம் கூட தமக்கு இல்லை எனவும் சுஜீவ சேனசிங்க குறிப்பிட்டுள்ளார்.