போதை மாத்திரைகளுடன் இருவர் கைது

227 0

வத்தளை மாபொல பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதை மாத்திரையாக பயன்படுத்தப்படும் ஒரு தொகை வலி வில்லைகளுடன் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களிம் இருந்து சுமார் 400 வில்லைகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படையினரின் இணைய தளத்தில் செய்தி வெளியிட்டுள்ளது.

உந்துருளி ஒன்றில் கொண்டுச் செல்லப்பட்ட நிலையில் வத்தளை பகுதியில் வைத்து இவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில் கைது செய்யப்பட்டவர்கள் மேலதிக விசாரணைகளின் பொருட்டு பேலியகொட காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.